புதுடெல்லி: நேற்று முன்தினம் இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை நன்றாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று முன்தினம் இரவு 8.45 மணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இதய சிகிச்சை நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், அவரை ஓய்வில் இருக்கும்படி வலியுறுத்தி இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறி உள்ளனர். தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் இருந்து வருகிறார். அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோ தனையும் நெகடிவாக வந்துள்ளது.