டெஹ்ரான்: ஓமன் வளைகுடாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஈரான் கடற்படை, தனது சொந்த கப்பல் மீது எதிர்பாராத விதமாக நடத்திய ஏவுகணை தாக்குதலில் 19 மாலுமிகள் பலியாகினர். 15 பேர் காயம் அடைந்தனர். ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாபஸ் பெற்றார். இதையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக ஈரான் நாட்டு டிரோன்களை அமெரிக்காவும், அமெரிக்காவின் டிரோன்கள் மீது ஈரானும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன.