வாலாஜாபாத்: வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் 2500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கிராமப்புற மக்கள் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் உள்ளாவூர்,தொள்ளாழி , நத்தாநல்லூர் ஆகியஊராட்சியில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை தாங்கினார்.