நெல்லை: ‘தினகரன்’’ செய்தி எதிரொலியாக தமிழகத்தில் ஊர்காவல் படையினருக்கு நேற்று உணவுப்படி வழங்கப்பட்டது. இருப்பினும் இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் காவல்துறைக்கு உறுதுணையாக ஊர்காவல் படை வீரர்கள் 14,700 பேர் பணியாற்றி வருகின்றனர். காவல்துறையினர் செய்யும் பல்வேறு பணிகளை ஊர்காவல் படையினர் இரவு, பகலாக மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா காலத்தில் போலீசாரின் வாகன சோதனைகள் மற்றும் ரோந்து பணிகளில் ஊர் காவல் படையினரும் அதிகளவில் பங்காற்றி வந்தனர். கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு போடப்பட்ட நிலையில், மாதத்தில் 20 நாட்கள் அவர்களுக்கு பணி வழங்க அரசு உத்தரவிட்டது.