தாகா: வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், வீட்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டாரா என்று சந்ேதகம் எழுந்துள்ளது. வங்கதேச தேசிய கட்சியின் தலைவரும் பிரதமராக 3 முறை பதவி வகித்தவருமான கலீதா ஜியாவுக்கு 2 ஊழல் வழக்குகளில் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 2018 பிப்ரவரி முதல் சிறையில் இருந்தார். சிறையில் 25 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.