திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த ராமந்தண்டலம் பகுதியில் வீட்டு மாடியில் சிலர் குக்கரில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட எஸ்.பி. அரவிந்தனுக்கு தகவல் வந்தது. அவர் மதுவிலக்கு அமல்பிரிவு டிஎஸ்பி கல்பனாதத்துக்கு தகவல் தெரிவித்தார். அவரது உத்தரவின்பேரில் திருவள்ளூர் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு ராமந்தண்டலம் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு வீட்டின் மாடியில் சிலர் சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் சாராயம் காய்ச்சியவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஒருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார்.