திருவனந்தபுரம்: சென்னையில் இருந்து ஸ்கூட்டர் மூலம் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து கேரளா வந்த வாலிபரை அதிகாரிகள் அரசு முகாமில் தனிமைப்படுத்தினர். திருவனந்தபுரம் வட்டியூர்க்காவு பகுதியைச் சேர்ந்த மாணவர் சென்னையில் மரைன் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். திடீரென லாக்-டவுன் அறிவிக்கப்பட்டதால் அவரால் ஊருக்கு வர முடியாமல் சென்னையில் சிக்கிக் கொண்டார். இந்த நிலையில் வேறு வழியின்றி கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து அந்த மாணவர் ஸ்கூட்டரில் ஊருக்கு புறப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் காலை திருவனந்தபுரம் வட்டியூர்க்காவில் உள்ள தனது வீட்டுக்கு அந்த மாணவர் வந்தடைந்தார்.