ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே கிளாம்பாக்கம் கிராமத்தில் நேற்று முன்தினம் அரசு மதுபானக்கடை திறக்கப்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து குடிமகன்கள் படையெடுத்தனர். இதையறிந்த சுற்றுப்புற கிராம மக்கள், டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என வலியுறுத்தி நேற்று பகல் 11 மணியளவில் திடீரென கடை முன்பு திரண்டு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்த, ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன் மற்றும் வெங்கல், பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கிராம மக்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.