சென்னை : கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சென்னையில் தனியார் மருந்து நிறுவன அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த பெருங்குடி சிவநேசன் என்பவர் தான் இந்த விபரீத முயற்சியில் உயிரை பறிகொடுத்தவர் ஆவார். சென்னை திநகரில் டாக்டர் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது நண்பர் பெருங்குடி சிவநேசன், உத்தராகண்ட் மாநிலம் காசிப்பூர் என்ற இடத்தில் சுஜாதா பயோ டெக் என்ற நிறுவனத்தின் புரோடக்சன் மேனேஜராக 27 வருடமாக பணிபுரிந்து வந்தார். இவர் சளி மருந்து உள்ளிட்ட பல்வேறு மருந்துகள் கண்டுபிடிப்பில் முக்கிய பங்கு வகித்தவர் என கூறப்படுகிறது. இவர் தற்போது கொரோனாவுக்கு மருந்து கண்டிபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டதாக தெரிகிறது.