முன்னாள் உலக அழகியும், நடிகையுமான பிரியங்கா சோப்ராவின் உறவினர் நிலா. இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் நிலா அன்பே ஆருயிரே, லீ, மருதமலை, கில்லாடி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கொரோனா தேசிய ஊரடங்கு காரணமாக டெல்லியில் உள்ள தனது வீட்டில் இருக்கிறார். 2 தினங்களுக்கு முன் நிலாவின் அப்பா, வெளியே வாக்கிங் சென்றார். அப்போது பைக்கில் வந்த இருவர், அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி விலையுயர்ந்த செல்போனை பறித்து சென்றனர். இது தொடர்பாக போலீசில் நிலா புகார் செய்துள்ளார்.