மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நேற்று மட்டும் அங்கு 11 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 38 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா நோய் தொற்றுக்கு இதுவரை 2 லட்சத்து 65 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதில் இருந்து மிகச்சில நாடுகளே தப்பி உள்ளன. கொரோனாவின் தாக்குதலில் முந்தைய வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்யாவும் தப்பவில்லை. அங்கு கடந்த 5 நாட்களாக தினமும் சராசரியாக 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 11 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா உறுதி செய்யப்பட்டது.