பெரம்பூர்: திருவிக நகர் மண்டலத்தில் மக்கள் அதிகமாக கூடி காய்கறி வாங்கிய பெரம்பூர் வீனஸ் காய்கறி மார்க்கெட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா நோய்தொற்று பாதிப்பில் திருவிக நகர் மண்டலம் முதலிடத்தை வகிக்கிறது. அம்மண்டலத்தில் உள்ள மார்க்கெட் பகுதிகள், மக்கள் அதிகமாக கூடுமிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், திருவிக நகர் மண்டல சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி அருண் தம்புராஜ் மற்றும் மண்டல அதிகாரி நாராயணன், செயற்பொறியாளர் செந்தில்நாதன் ஆகியோர் கொண்ட குழு நேற்று முன்தினம் மாலை மக்கள் அதிகமாக கூடும் பெரம்பூர் வீனஸ் காய்கறி மார்க்கெட் பகுதியை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு மக்கள் சமூக இடைவெளியின்றி கூட்டமாக நின்று காய்கறி வாங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.