செங்கல்பட்டு: டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கொரோனா தொற்று உலகத்தையே உலுக்கியதால், மத்திய மாநில அரசுகள் கடந்த 40 நாட்களாக ஊரடங்கை அமல்படுத்தியது. அதே நேரத்தில் தேவையின்றி பொதுமக்களை வெளியே செல்ல விடாமல் ஆங்காங்கே போலீசார் தடுத்து நிறுத்தினர். பல இடங்களில், வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர்.
ஆனாலும், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்கிறது. இந்நிலையில், மாநில அரசு, தேவையின்றி டாஸ்மாக் கடைகளை திறந்து, கொரோனா தொற்று அதிகளவில் பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.