நொய்டா: உத்தரப் பிரதேசம் மாநிலம் கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் செல்பேசியில் ஆரோக்கிய சேது செயலி இல்லாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், நாடு முழுவதும் ஊரடங்கு மே 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த திங்கள் கிழமை முதல் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 14-ம் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, முக்கியமாக, கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, நிச்சயமாக ‘ஆரோக்யா சேது’ மொபைல் ஆப்பை பதிவிறக்கவும். இந்த பயன்பாட்டைப் பதிவிறக்க மற்றவர்களை ஊக்குவிக்கவும் என்றார்.
6 மாதம் சிறைத் தண்டனை; ஆரோக்கிய சேது செயலி இல்லாதது தண்டனைக்குரிய குற்றம்...உ.பி. கவுதம் புத்த நகர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
- சிறையில்
- க ut தம் புத்த நகர் மாவட்ட நிர்வாக அறிவிப்பு
- நிர்வாக அறிவிப்பு
- க ut தம் புத்த நகர் மாவட்டம்