திருமலை: ஆந்திராவில் ஊரடங்கை மீறியதாக நடிகை ரோஜா உட்பட 5 ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு உயர் நீதிமன்றம் அதிரடியாக நோட்டீஸ் அளித்துள்ளது.
கொரோனா பரவுவதை தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கை மீறியதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை ரோஜா உட்பட 5 எம்எல்ஏக்களுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி, காளஹஸ்தி எம்எல்ஏ மதுசூதன், நகரி எம்எல்ஏ நடிகை ரோஜா, சூலூர்பேட்டை எம்எல்ஏ சஞ்சீவியா, பலமனேர் எம்எல்ஏ வெங்கடகவுடா மற்றும் சிலக்கலூர்பேட்டை எம்எல்ஏ ரஜினி ஆகிய 5 பேரும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி பொதுமக்களை கூட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கியதாக வழக்கறிஞர் கிஷோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.