காஷ்மீர்: காஷ்மீரில் சிகிச்சை பலனின்றி இறந்த கர்ப்பிணியின் உடலை உறவினர்கள் ஸ்ட்ரச்சரில் வைத்து எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் நேற்று முன்தினம் காலை மாவட்ட துணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மாவட்ட பிரசவம் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கர்ப்பிணி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் கர்ப்பிணியின் உடலை ஸ்ட்ரச்சரில் வைத்து அவரது உறவினர்கள் சாலையில் தள்ளிச் சென்றனர். இந்த வீடீயோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் செவிலியர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.