நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில், இனி ஏற்றமும், இறக்கமும் 5 காசு தான் என என்இசிசி அறிவித்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் நேற்று என்சிசி 5 காசுகள் உயர்த்தியது. இதன்படி, ஒரு முட்டையின் விலை 320 காசில் இருந்து 325 காசாக உயர்ந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தியாகும் முட்டைக்கு கடந்த 35 ஆண்டுக்கு மேலாக என்இசிசி விலை நிர்ணயம் செய்து வருகிறது. ஆனால் பண்ணையாளர்கள் இடையே சமீபகாலமாக ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதலால், என்இசிசி நிர்ணயம் செய்யும் விலையை இருதரப்பினரும் கடும் விமர்சனம் செய்து வருகிறார்கள். ஊரடங்கு நேரத்தில் முட்டை விலையை என்இசிசி இஷ்டத்துக்கு உயர்த்தியது. இந்த நிலையில் கடந்த வாரம் 2 நாளில் 130 காசுகள் குறைக்கப்பட்டது.