தம்மம்பட்டி: சேலம் அருகே மலைக்கிராமங்களில் இருந்து, கர்நாடகா மாநிலத்தில் உள்ள எஸ்டேட்டுக்கு வேலைக்கு சென்ற கூலித்தொழிலாளர்கள், கொரோனா ஊரடங்கால், உணவுக்கே சிரமப்பட்டு வருகின்றனர். தங்களை தமிழக அரசு மீட்க வேண்டும் என வாட்ஸ் அப்பில் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி, கொல்லிமலை அடுக்கம், பச்சமலை பெரியநாகூர் ஆகிய மலை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் மற்றும் நாமக்கல், வேலூர் மாவட்டங்களை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் குடும்பத்துடன் சென்று, கடந்த ஜனவரி மாதம் கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்மகளுர் மாவட்டம், மூடிகடை தாலுகா, ஆலத்தூர் கிராமத்தில் உள்ள தாரைக்குடி எஸ்டேட்டில் மிளகு பறிக்கும் பணிக்கு சென்றனர்.