வாஷிங்டன்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகம் என மத்திய அரசில் உயர் பதவி வகிப்போரின் 6 டிவிட்டர் கணக்கை ‘பாலோ’ (பின் தொடர்தல்) செய்து வந்த அமெரிக்காவின் வெள்ளை மாளிகை சமீபத்தில் திடீரென அவற்றை ‘அன்பாலோ’ செய்தது. இது சமூக வலைதளத்தில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியை வெள்ளை மாளிகை கழற்றிவிட்டது ஏன் என பலர் பரபரப்பாக பேச ஆரம்பித்தனர். இந்நிலையில், இதுகுறித்து வெள்ளை மாளிகை தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி கூறுகையில், ‘‘அமெரிக்க அரசின் மூத்த நிர்வாகிகளின் டிவிட்டர் கணக்கை மட்டுமே வெள்ளை மாளிகை பின்தொடர்ந்து வருகிறது.