சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட முதல் சினிமா பிரபலம் பாலிவுட் பாடகி கனிகா கபூர். லண்டனில் இருந்து திரும்பிய அவருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கலந்துகொண்ட விருந்தில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. கனிகா குணமடைந்து வீடு திரும்பினார். மற்றவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. என்றாலும் இபிகோ 269 மற்றும் 270 பிரிவின் கீழ் கனிகா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோயை பரப்பும் வகையில் நடந்து கொண்டதாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கனிகா கபூர் வீட்டு வாசலில் லக்னோ காவல்துறை நோட்டீஸ் ஒட்டியுள்ளது. காவல் நிலையத்திற்கு நேரில் வந்து எழுத்து மூலமான வாக்குமூலம் தர வேண்டும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.