தமிழகம் குடியிருப்பில் புகுந்த 10 அடி மலைப்பாம்பு Apr 28, 2020 அபார்ட்மெண்ட் அடி பைதான் திருப்பத்தூர் குடியிருப்பு பகுதி வன அதிகாரிகள் திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் வெளியாரி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் குடியிருப்பு பகுதியின் அருகே கருவேல மரத்தின் கீழே சுமார் 10 அடி நீளமுள்ள வெங்கனத்தி இனத்தை சேர்ந்த மலைப்பாம்பு நேற்று கிடந்தது. பின்னர் நேரம் ஆக ஆக குடியிருப்பு பகுதியை நோக்கி நகர்ந்து வந்தது. மலைப்பாம்பை கண்டு அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருப்புத்தூர் தீயணைப்புத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமையிலான வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவியை வைத்து பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை திருப்புத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் மலைப்பாம்பை மதகுபட்டி அருகில் உள்ள மண்மலை வனப்பகுதியில் உயிருடன் பத்திரமாக விட்டனர்.
உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்த இளைஞரின் தாய், தந்தையிடம் மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் விசாரணை
விழுப்புரம் மாவட்டத்தில் கிடைக்கும் பழங்கால கல் மரங்கள்; திருவக்கரை தொல்பொருள் பூங்காவில் காட்சிக்கு வைப்பு..மக்கள் வியப்பு..!!
நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தாக்கிய வழக்கில் கைதான பாஜக பிரமுகர் மீது குண்டர் சட்டம்!
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்
கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 138வது மே தின வாழ்த்து..!!
கோடை வெயில் எதிரொலி.. மதுரையில் ஒரு முட்டை மூன்று ரூபாய்க்கு விற்பனை: விலை குறைவால் போட்டி போட்டு வாங்கிச்சென்ற மக்கள்..!!
கடும் வெயிலுக்கு இடையே குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கொட்டிய கோடை மழை; வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி..!!
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் 2024-2025ம் கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
வெறுப்பு பேச்சுகளை பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பாஜக படுதோல்வி அடைவது உறுதியாகும் : செல்வப்பெருந்தகை காட்டம்