மேச்சேரி: சேலம் அருகே மேச்சேரியில் தாயாரின் இறுதி சடங்கிற்கு, ஊரடங்கால் வரமுடியாத ராணுவ வீரர், ராஜஸ்தானில் இருந்து வீடியோகாலில் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதது, கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்த புக்கம்பட்டி அழகா கவுண்டனூரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி மாது (65). இவர்களது மகன் சக்திவேல்(42). ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை சக்திவேலுவின் தாய் மாது, உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.ராஜஸ்தான் ரெஜிமெண்ட்டில் உள்ள சக்திவேலுக்கு செல்போன் மூலம் தந்தை தகவல் தெரிவித்தார்.