புதுடெல்லி: கொரோனாவால் காப்பீட்டு துறை நிறுவனங்களின் வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டு இறுதி மாதமான மார்ச் மாதத்தில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வருவாய் அதிகமாகவே இருக்கும். வரி சேமிப்புக்காக புதிதாக காப்பீட்டில் பலர் முதலீடு செய்வார்கள். ஆனால், கடந்த மாதம் இந்த துறையில் 24 நிறுவனங்களுக்கு புதிய பிரீமியங்கள் மூலம் 25,409 கோடி கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 32 சதவீதம் சரிவு என ஆயுள் காப்பீட்டு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.