அன்னூர்: அன்னூரில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமானது. கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் 500 ஏக்கரில் நேந்திரன் வாழை பயிரிடப்பட்டுள்ளது. நேற்று இரவு அன்னூர் வடக்கு பகுதியில் சூறாவளி காற்றுடன் அரை மணிநேரம் கனமழை பெய்தது. இதனால், அக்கரைசெங்கபள்ளி, பச்சாகவுண்டனூர், கோவில்பாளையம், இலக்கியபாளையம், ஆம்போதி நாச்சிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் 20,000 வாழை மரங்கள் முறிந்து விழுந்து நாசமானது. இவை இன்னும் ஒரு மாதத்தில் முழுமையாக விற்பனைக்கு கொண்டு செல்லும் நிலையில் இருந்தது. தற்போது, பிஞ்சாக இருப்பதால் அதை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.