தினமும் லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை: ராகுல்காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி:  நாட்டில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேருக்கு கொரோனா நோய் கண்டுபிடிக்கும் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில், “அதிக எண்ணிக்கையிலான பொது மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவது மட்டுமே கொரோனாவிற்கு எதிரான முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என வல்லுனர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். தற்போது நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகின்றது.  ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேருக்கு கொரோனா நோய் பரிசோதனை செய்யப்பட வேண்டும். இதற்கு தேவையான கருவிகள் போதுமான அளவு இருப்பு உள்ளது. இதற்கு இடையூறாக உள்ள சிக்கல்ளை பிரதமர்  சரி செய்யவேண்டும் மற்றும் விரைந்து செயல்பட வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

Related Stories: