அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செல்போன் கடையை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே அத்திப்பட்டு, செல்லியம்மன் நகர் ராகவேந்திரா தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (38). இவர், அம்பத்தூர் -அயனம்பாக்கம் சாலை, ஐ.சி.எப் காலனியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். ஊரடங்கு உத்தரவு காரணமாக இவரது கடை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது கடை பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதுபற்றி அக்கம் பக்கத்தினர் சுரேசுக்கு தகவல் தெரிவித்தனர்.