சீர்காழி: சீர்காழியில் ஊரடங்கை மீறுவோரை கண்காணித்த ட்ரோன் கேமராவை கல்லால் தாக்க முயற்சித்த இளைஞர்களை பிடித்து போலீசார் எச்சரித்து அனுப்பினர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் போலீசார் ட்ரோன் கேமரா மூலம் சீர்காழி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். இதில் சீர்காழி நகர் பகுதி, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான எடமணல், திருமுல்லைவாசல் உள்ளிட கடற்கரையோர பகுதிகளிலும் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்தனர்.