ஆவடி: ஆவடி, திருவள்ளுவர் நகர், துளசி தெருவில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையில், இந்த பெண் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று சோதனைக்காக ரத்த மாதிரியை கொடுத்திருந்தார். இந்நிலையில், நேற்று மதியம் இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, இந்த பெண் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இவர் வசிக்கும் ஆவடி திருவள்ளுவர் நகர் பகுதி சீல் வைக்கப்பட்டது.