உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஊரடங்கு நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏரிகள் மற்றும் மைதானங்களில் விளையாடி வருகின்றனர். இதுபோல் விளையாடுபவர்கள் போலீசார் கண்களில் படாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி மாடல்காலனி பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் மகன் இளந்தமிழன் (15). அரசு மாதிரிப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த 4 நாட்களுக்கு முன்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வீட்டருகே விளையாடி கொண்டிருந்த இளந்தமிழன் உள்ளிட்டோர் பயந்துபோய் ஓடியுள்ளனர். இதில் இளந்தமிழன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளான்.