சிங்கம்புணரி: ஊரடங்கால் சிங்கம்புணரி அருகே உணவிற்காக சிறுவர்கள், முதியோர் பரிதவித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பிரான்மலை பகுதியில் பூ கட்டும் தொழிலில் அதிகளவில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் காரைக்குடி, பொன்னமராவதி, சிங்கம்புணரி உள்ளிட்ட ஊர்களில் உள்ள கடைகள், வீடுகளில் பூ விற்பனை செய்து வருமானம் பார்த்து வந்தனர். கடந்த ஒரு மாதமாக கடையடைப்பு காரணமாக, பூ கட்டும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கூலி வேலைக்கு செல்பவர்களும் வருமானமின்றி அவதியடைந்து வருகின்றனர். கொரோனா நோய் பரவலை தடுக்கும்விதமாக, ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.