டெல்லியில் விமான போக்குவரத்து துறை அமைச்சக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், கொரோனாவால் பாதித்துள்ள ஊழியருக்கு விமானப் போக்குவரத்து அமைச்சகம் துணை நிற்கிறது.