வேலூர்: தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க, கைதிகளை பார்க்க வரும் உறவினர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில், சிறையில் உள்ள கைதிகளின் அதிக எண்ணிக்கையை குறைக்கவும் அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து சிறைகளில், சிறிய வழக்குகளில் சிக்கி தண்டனை அனுபவிப்பவர்களை, நீதிமன்றங்கள் மூலம், நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க அரசு, உத்தரவிட்டது. மேலும் பல்வேறு வழக்குகளில் கைதாகும் கைதிகளை கிளைச்சிறைகளில் அடைக்கவும் உத்தரவிட்டது. தற்போது கிளைச்சிறைகள் அனைத்தும் நிரம்பி உள்ளதால், வேலூர் பார்ஸ்டல் சிறையில் கைதிகளை நேற்று முன்தினம் முதல் அடைத்து வருகின்றனர்.