வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறப்பு எஸ்ஐ சுகுமார் தலைமையிலான போலீசார் விதிமீறியதாக பழம், காய்கறிகள் விற்பனை செய்யும் தள்ளு வண்டியை பறிமுதல் செய்துள்ளனர்.
இதையடுத்து போலீஸ் நிலையம் சென்று இந்த வண்டியின் உரிமையாளர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கேட்டுள்ளார். அப்போது எஸ்எஸ்ஐ சுகுமார், ஏட்டு மணிமேகலை ஆகியோர் ‘2,500 கொடுத்தால் தான் வாகனத்தை விடுவிக்க முடியும்’ என்று கூறியுள்ளனர்.