காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் மாளிகை ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஆப்கானிஸ்தானில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது ஊரடங்கு மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களும் அங்கே மூடப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் இதுவரை 933 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 33 பேர் இறந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிக்க சரியான சுகாதார வசதிகள் இல்லை. ஆப்கானிஸ்தான் நாடு, ஏற்கனவே உணவு மற்றும் மருந்து பற்றாக்குறையை எதிர்த்துப் போராடுகிறது. அதே நேரத்தில் தலிபான்களுடன் வன்முறை மோதல்கள் தொடர்கின்றன.
அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், ஆப்கானிஸ்தான் அதிபராக அஷ்ரப் கானி சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.