சேலம்: ஊரடங்கை மீறிய வாகனங்களுக்கு வண்ண குறியீடு பணியில் ஈடுபடாமல் செல்போனில் விளையாடிய எஸ்.ஐ, ஏட்டு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் சேலத்தில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளதால் அதனை கட்டுப்படுத்த அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் வாகனங்களுக்கு 3 வித வண்ண குறியீடு போடும் பணியில் போக்குவரத்து பிரிவு போலீசாருடன் ஆயுதப்படை மற்றும் ஸ்டேஷன் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.