செல்போனில் விளையாடிய எஸ்.ஐ., ஏட்டு அதிரடி மாற்றம்

சேலம்: ஊரடங்கை மீறிய வாகனங்களுக்கு வண்ண குறியீடு பணியில் ஈடுபடாமல் செல்போனில் விளையாடிய எஸ்.ஐ, ஏட்டு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் சேலத்தில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளதால் அதனை கட்டுப்படுத்த அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் வாகனங்களுக்கு  3 வித வண்ண குறியீடு போடும் பணியில் போக்குவரத்து பிரிவு போலீசாருடன் ஆயுதப்படை மற்றும் ஸ்டேஷன் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 16ம் தேதி கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கோர்ட் ரோட்டில் போக்குவரத்து பிரிவு எஸ்.ஐ. அம்ஜத்அலி, ஏட்டு ரகுபதி ஆகியோர் இந்த பணியை செய்யாமல் அங்கு அமர்ந்து, செல்போனில் விளையாடி கொண்டிருந்தனர். இதை படமாகவும், வீடியோகவும் எடுத்து சிலர் போலீஸ் கமிஷனர் செந்தில்குமாருக்கு அனுப்பினர். இதையடுத்து இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி அவர் நேற்று உத்தரவிட்டார்.

Related Stories: