திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே வார்டு உறுப்பினர்கள், துணைத்தலைவர் ஆகியோர், நாற்காலியில் அமர்ந்து பணி புரியும்போது, ஊராட்சி தலைவர் தரையில் அமர்ந்து பணி புரியும் கொடுமை நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், புதுச்சத்திரம் ஊராட்சியில், தற்போது நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மெர்சி என்ற லட்சுமி. அருந்ததியர் சமூத்தைச் சேர்ந்தவர். இவர் தலைவராக பதவியேற்ற காலத்திலிருந்தே இங்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தரையில் அமர்ந்தே தனது பணிகளை பார்த்து வருகிறார்.