திருப்பதி: திருப்பதி அருகே கால் எலும்பு முறிந்த பெண்ணை ஆட்டோக்கள் இல்லாததால் தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் திருப்பதி நகரில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் ரயில், பேருந்து, ஆட்டோ, வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் தடை செய்யப்பட்டு உள்ளது. இதற்காக காவலர்கள் இரவு, பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி மார்க்கெட் அருகே உள்ள பெத்த காப்பு லே-அவுட் பகுதியில் விஜயா(50) என்பவர் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார்.