பரமக்குடி: ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரம் இல்லாமல் இருப்பதை அரசுக்கு தெரிவிக்கும் வகையில், இசை வாத்தியங்களை வாசித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். தென்மாவட்டங்களில் நாட்டுப்புற கலைஞர்கள் அதிகம் வசிக்கின்றனர். ெகாரோனா ஊரடங்கு உத்தரவால் கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள், தனியார் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், வருமானமின்றி அவர்கள் தவித்து வருகின்றனர். இதனை அரசுக்கு தெரிவிக்கும்விதமாக ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பாண்டியூர் பகுதியில் கலைச்செல்வன், துரைப்பாண்டி ஆகியோர் தலைமையில் இசைக்கலைஞர்கள் நாட்டுப்புற கருவிகளை கொண்டு இசைத்தனர். தடை உத்தரவு இருக்கும் நிலையில் கூட்டாக இசை வாத்தியம் வாசித்ததால், கலைச்செல்வன், துரைப்பாண்டி உட்பட 5 பேர் மீது நயினார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.