கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஜிஆர் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (44). கொத்தனார். இவரது மனைவி புஷ்பா (40). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகன் பிளஸ் 2 படிக்கிறான். மகள்களுக்கு திருமணமாகி கணவன் வீட்டில் உள்ளனர். புஷ்பா சில மாதங்களாக அடிக்கடி செல்போனில் சிரித்து பேசியுள்ளார். இதனல், சந்தேகமடைந்த ரமேஷ், மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருக்கும் என நினைத்து அடிக்கடி தகராறு செய்துள்ளார். சில நாட்களாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வேறொருவருடன் புஷ்பா தனிமையில் இருந்ததாக ரமேஷுக்கு தெரிந்தது. இந்நிலையில், இவர்களது மகன் நேற்று முன்தினம் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து மனைவியுடன் ரமேஷ் அன்று இரவு வாய்த்தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.