காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பெருநகராட்சி 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, வாரத்தில் 2 நாட்களுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் பெருநகராட்சியின் 51 வார்டுகளில், கொரோன பாதிப்புகள் கண்டறியப்பட்ட 22, 24, 25, 28, 29, 32, 33, 34, 36 ஆகிய வார்டுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீதமுள்ள 42 வார்டுகளும் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 42 வார்டுகளுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அவசரத் தேவைகளுக்காக பொதுமக்கள் சென்றுவர தலா வார்டுகளிலும் தற்காலிக வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.ஒவ்வொரு மண்டலங்களிலும் உள்ள மளிகைக் கடைகள், மருத்துவமனைகள், இறைச்சிக் கடைகள், பால், தண்ணீர் கேன் கடைகள், ஏடிஎம் ஆகியவற்றுக்கு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.