பிரேசிலியா: இரண்டாம் உலகப் போரின் போது பிரேசில் ராணுவப் படையில் பணியாற்றிய 99 வயது முன்னாள் வீரர் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் போது பிரேசில் ராணுவப் படையில் ஆப்பிரிக்காவில் 2ம் லெப்டினென்டாக பணியாற்றியவர் எர்மாண்டோ பிவெட்டா. இரண்டு வாரங்களுக்கு முன் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பிரேசில் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், எட்டு நாட்களுக்கு பின், குணமடைந்து நேற்று அங்கிருந்து வெளியேறிய போது பச்சை நிற ராணுவத் தொப்பியுடன் உற்சாகமாக கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.