திருப்போரூர்: கொரோனா பரவலை தடுக் கடந்த 20 நாட்களாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதையொட்டி, மதுபாட்டில்கள் அந்தந்த கடைகளிலேயே வைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் குடிமகன்களால், டாஸ்மாக் கடைகள் உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதைதொடர்ந்து, கிராமங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில்களை பிரதான ஊர்களில் இயங்கும் கடைகளுக்கு இடமாற்றம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி திருப்போரூர் அடுத்த ஆலத்தூரில் செயல்பட்ட டாஸ்மாக் கடையில் இருந்து சுமார் ₹6.75 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருப்போரூர் ரவுண்டானா அருகே உள்ள கடைக்கு மாற்றப்பட்டன.