மூணாறு: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் கடந்த ஏப். 2ல் இங்கிலாந்தை சேர்ந்த நபர், காங்கிரஸ் கட்சி பிரமுகர் உள்ளிட்ட 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில், இங்கிலாந்தை சேர்ந்தவருக்கு ஹெச்ஐவி மருந்து செலுத்தியதன் மூலம், அவர் குணமடைந்து நாடு திரும்பினார். செருதோணியைச் சேர்ந்த பிரபல காங்கிரஸ் பிரமுகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவருடன் தொடர்பில் இருந்த சுருளி பகுதியைச் சேர்ந்த நபர் மற்றும் அவரது மனைவி, தாய், மகன், பைசன்வாலி பகுதியைச் சேர்ந்த ஆசிரியை, அவரது மகன், டெல்லிக்கு சென்று வந்த தொடுபுழாவைச் சேர்ந்த நபர் உள்பட 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தனர். இதனால், மாவட்டத்தில் பீதி ஏற்பட்டது.