ஒரு சதவீதத்துக்கு மேல் எச்டிஎப்சி நிறுவன பங்குகளை வாங்கியது சீன மத்திய வங்கி

பீஜிங்: எச்டிஎப்சி நிறுவனத்தில் சீன மத்திய வங்கி 1.01 சதவீத பங்குகளை கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதற்கு முன்பு மேற்கண்ட நிறுவனத்தில் இந்த வங்கி 0.8 சதவீத பங்குகளை வைத்திருந்தது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தின்படி, சீன மத்திய வங்கி எச்டிஎப்சி நிறுவனத்தில் 1.75 கோடி பங்குகளை கொண்டுள்ளது.   மும்பை பங்குச்சந்தையில் கடந்த வியாழக்கிழமை வர்த்தக முடிவில் எச்டிஎப்சி நிறுவன பங்கு மதிப்பு 1701.95 ஆக இருந்தது. இதன்படி, சீன மத்திய வங்கி வைத்துள்ள பங்கு மதிப்பு 3,000 கோடி. இந்த நிறுவனத்தில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 70.88 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.  

இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘கொரோனா வைரசால் உள்நாட்டு நிறுவனங்கள் நலிந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவன பங்குகளை வாங்கி ஆதிக்கம் செலுத்தவில்லை என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்’ என கூறியுள்ளார்.

Related Stories: