நாகை: நாகையில் ஓய்வுபெற்ற அரசு டாக்டருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் வசித்த பகுதியை சுற்றி 5கி.மீட்டர் சுற்றளவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோ னா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் டெல்லி நிகழ்ச்சிக்கு சென்று நாகை திரும்பிய 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். நாகை காடம்பாடி பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு டாக்டருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதால் முதல் கட்டமாக அவரது கிளினிக் சீல் வைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக டாக்டரிடம் சிகிச்சை பெற வந்தவர்கள் யார் யார் என்பது குறித்து சுகாதாரத்துறையினர் பட்டியல் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.