சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: கடந்த 17 நாட்களாக அமலில் உள்ள நாடு முடக்கத்தால் மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு உட்பட அத்தியாவசிப் போருள்களை 500 விலையில் நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யும் நடவடிக்கை வரவேற்கத் தக்கது. ஆனால் அதே சமயம் இந்த நியாய விலைப் பொருள்கள் அனைவருக்கும் கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடி குடும்பங்கள் உள்ள நிலையில் 10 லட்சம் பொட்டலங்கள் மட்டுமே விற்பனை செயவது சமூக இடைவெளி நிறுத்தல் என்ற முறை உடைத்துவிடும்.