மதுரை: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் செல்போன் கான்பரன்சிங் முறையில் 32 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது. கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனால், மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவசர மனுக்கள் மீதான விசாரணை செல்போன் கான்பரன்சிங் முறையில் நடக்கிறது. இதற்கான மனுக்களை இமெயில் மூலம் தாக்கல் செய்ய வேண்டும். இதன்படி, நேற்று மட்டும் 32 மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தன. இதில், 5 பேருக்கு கொலை வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டது. 10 பேருக்கு பல வழக்குகளில் முன்ஜாமீன் வழங்கப்பட்டது.