கூடுவாஞ்சேரி: ஆதனூர் ஊராட்சியில் திமுக சார்பில், 10 ஆயிரம் குடும்பத்தினருக்கு வீடு, வீடாக சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் ஊராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. தற்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், திமுக சார்பில், ஆதனூர் ஊராட்சியில் உள்ள 10 ஆயிரம் குடும்பத்தினருக்கான நலத்திட்ட உதவிகள் வீடு, வீடாக சென்று நேற்று வழங்கப்பட்டது. ஊராட்சி திமுக செயலாளரும் தொழிலதிபருமான தமிழமுதன் தலைமை தாங்கினார்.