திருமலை: ஐதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் நோய் குணமானவருக்கு பதிலாக, கொரோனா பாதித்த டிஎஸ்பி அலியை வீட்டிற்கு அனுப்பி டாக்டர்கள் அலட்சியமாக செயல்பட்டு உள்ளனர். தெலங்கானா மாநிலம், கொத்தகூடம் டிஎஸ்பி.யாக இருப்பவர் அலி. அவரது மகன் வெளிநாட்டுக்கு படிக்க சென்று வீடு திரும்பியதால் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. அவர் மூலமாக, டிஎஸ்பி அலி, அவர் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, ஐதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். முன்னதாக, தனது மகன் வெளிநாட்டில் இருந்து வந்த தகவலை மறைத்த குற்றத்துக்காக அலி சஸ்ெபண்ட் செய்யப்பட்டார்.