தண்டையார்பேட்டை: மண்ணடியில், பைக் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில், தனியார் நிறுவன செக்யூரிட்டி அடித்து கொலை செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (65). இவர் மண்ணடி, லிங்கி செட்டி தெருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி, செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (28). அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.கடந்த 1ம் தேதி, ராஜேந்திர பிரசாத் தன் இருசக்கர வாகனத்தை எடுக்க அலுவலகத்துக்கு வந்துள்ளார். அப்போது, மாரிமுத்து, வாகனத்தை எடுக்க கூடாது என பிரசாத்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பிரசாத் மாரிமுத்துவை அடித்து கீழே தள்ளியுள்ளார்.