பைக் எடுப்பதில் தகராறு செக்யூரிட்டி அடித்து கொலை: தனியார் ஊழியருக்கு வலை

தண்டையார்பேட்டை: மண்ணடியில், பைக் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில், தனியார் நிறுவன செக்யூரிட்டி அடித்து கொலை செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (65). இவர் மண்ணடி, லிங்கி செட்டி தெருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி, செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். ஏழுகிணறு பகுதியை  சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (28). அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.கடந்த 1ம் தேதி, ராஜேந்திர பிரசாத்  தன் இருசக்கர வாகனத்தை எடுக்க அலுவலகத்துக்கு வந்துள்ளார். அப்போது, மாரிமுத்து, வாகனத்தை எடுக்க கூடாது என பிரசாத்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பிரசாத் மாரிமுத்துவை அடித்து கீழே தள்ளியுள்ளார்.

இதில், படுகாயமடைந்த மாரிமுத்துவை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாரிமுத்து நேற்று சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இதுகுறித்து வடக்கு கடற்கரை போலீசார் கொலை  வழக்கு  பதிவு செய்து தலைமறைவாக உள்ள பிரசாத்தை தேடி வருகின்றனர். இச்சம்பவம் மண்ணடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: